fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

கொரோனா பிசிஆர் பறிசோதனை கட்டணம் குறைப்பு-தமிழக அரசு!

சென்னை:

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றை உறுதிபடுத்த செய்யப்படும்  பிசிஆர் சோதனைக்கான கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

முதலமைச்சர் காப்பீடு அட்டை வைத்திருப்பவர்கள்  பிசிஆர் சோதனை செய்தால் 2500 ரூபாய் வரை  வசூலிக்கலாம்.

மற்றவர்களுக்கு 3000 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும்.

வீட்டிற்கு நேரடியாக வந்து சோதனை செய்தால் கூடுதலாக 500 ரூபாய்  வசூலிக்கலாம்.

அவசர சிகிச்சை தேவையில்லாத கொரோனா நோயாளிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றுவது குறித்து முடிவெடுக்க மாவட்ட அளவில்  குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close