செங்குன்றம் சரக காவல் எல்லையில்அதிரடி ரவுடிகள் வேட்டை
செங்குன்றம் காவல் மாவட்டம் சார்பில் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் திடீர் ரவுடி வேட்டை நடைபெற்றது.இந்த வேட்டையின்போது16 பேர் பிடிபட்டனர் எனவும் பழைய ரவுடிகள் மற்றும் புதிய ரவுடிகளை கண்காணித்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துணை ஆணையர். பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.செங்குன்றம் காவல் மாவட்டத்தில் ரவுடிசம். ஒழித்தல் போதை விநியோகம் தடுத்தல்.,மற்றும் குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்கான நடவடிக்கை யில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்தார்.இந் நிகழ்வின்போது கடைகள் முக்கிய தெருக்கள். பொதுமக்கள். குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துணை ஆணையர் .பாலகிருஷ்ணன். உதவிஆணையர்.குமரேசன். செங்குன்றம் ஆய்வாளர். ஜெகநாதன். சோழவரம் ஆய்வாளர்.ஜராஜகுமார் ஆகியோரின் செல்போன் எண்களை முக்கிய இடங்களில் எழுதி வைத்து தைரியமாக புகார் அளிக்கவோ. தகவல் அளிக்கவோ செய்யலாம் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார் .இந்த நிகழ்வில் உதவி ஆய்வாளர்கள். போலீசார் 50க்கு மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.