RETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு
ஆர்.எஸ். பாரதிக்கு இடைக்கால ஜாமீன்…! எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு
RS bharati got bail
சென்னை:
திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
திமுக அமைப்பு செயலாளரான ஆர்.எஸ்.பாரதி ஆலந்தூரில் அவரது வீட்டில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார். திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்எஸ் பாரதி பேசியது சர்ச்சையை கிளப்பியது.
இதுதொடர்பாக ஆதித் தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் புகார் அளித்திருந்தார். இதையடுத்து அவரது வீட்டிற்கு சென்ற மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான போலீசார், பாரதியை கைது செய்தனர்.
தொடர்ந்து,சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி நாகராஜன் முன், பாரதி ஆஜர்படுத்தப்பட்டார். பாரதி மீதான வழக்கு ஒன்று உயர் நீதி மன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவருக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.