fbpx
OthersRETamil Newsஅரசியல்இந்தியா

காலியாக உள்ள தொகுதிகளுக்கு கட்டாயம் தேர்தல் நடத்தப்படும்-தேர்தல் ஆணையம்!

election commission to announce bypoll schedule!

புது தில்லி:

நாடு முழுவதும் உள்ள காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் காலியாக உள்ள சுமார் 56 பேரவை தொகுதிகள் மற்றும் மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது என தேர்தல் அணைய செய்தி தொடர்பாளர் செபாலி சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தப்படும் தேதிகள் ஏதும் குறிப்பிடதா நிலையில், சுமார் ஏழு  பேரவை தொகுதிக்களுக்கான தேர்தலும் மற்றும் ஒரு மக்களவை தொகுதிக்கான தேர்தலும் வருகின்ற செப்டம்பர் ஏழாம் தேதிக்குள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மீதம் உள்ள சுமார் 49 பேரவை தொகுதிகளுக்கான தேர்தலும் செப்டம்பர் மதத்திற்கு பிறகு நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close