Others
திருவள்ளூர் மாவட்டஆட்சியாளருக்கு அவப்பெயர்….?
திருவள்ளூர் மாவட்டம் நாராவரி குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட சோத்துப்பாக்கம் சாலை உழவர் சந்தை மற்றும் தீயணைப்பு நிலையம் உள்ள பகுதியில் சாலையில் சாக்கடை நீர் ஓடுகிறது.கலைவாணர் தெருவில் சாக்கடை அடைப்பால் சாலையில் துர்நாற்றத்துடன் கழிவுநீர் தேங்கி நிற்கிறது .
இதனால் வாகன ஓட்டிகள் .பள்ளிக்கு செல்லும் மாணவ. மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.பேரூராட்சி அதிகாரிகளிடம் இது குறித்து சொல்லியும் எந்த பலனும் இல்லை.மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொசு உற்பத்தியால் டெங்கு காய்ச்சல். மலேரியா பரவும் இந்த வேளையில் சாலையில் கழிவுநீர் தேங்குவதும்.வெள்ளமாக ஓடுவதும் நோயை பரப்பும் காரணத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.