fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

அடுத்த 24 நேரத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு..! சென்னை வானிலை மையம் தகவல்!

TN rain alert, Chennai weather centre

சென்னை:

தமிழகத்தில் அடுத்த 24 நேரத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை மற்றும் நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

பலத்த காற்று வீசும் என்பதால் ஆந்திர, கர்நாடக, குஜராத் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தமது செய்திக்குறிப்பில் கூறி உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close