இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – அதிர்ச்சியில் மக்கள் , மீட்புப்பணிகள் தீவிரம்

இத்தாலிநாட்டில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1-ஆக பதிவாகியுள்ளது.
இத்தாலி நாட்டின் அப்ருஜ்ஜோ என்ற இடத்தில் உள்ள காலேலங்கோ நகர் அருகே லேசான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் நடுஇரவில் ஏற்பட்டதால் துக்கத்தில் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே வெளியேறினர்.தூங்கிகொண்டுருந்த அணைத்து மக்களும் வீதியில் திரண்டதால் பதற்றம் அதிகரித்தது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால் பல இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுடன் சாலைகளில் பிளவுகளும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் பற்றி தேசிய புவிஇயற்பியல் மற்றும் எரிமலையியல் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் நிலநடுக்கம் காலேலங்கோ நகர் அருகே 10 மைல் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.இந்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை பற்றியும் , பொருட்சேதம் பற்றியும் தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.















