fbpx
Others

தேனி மாவட்டஆட்சியரின் கவனத்திற்க்கு….?

தேனி மாவட்டம் தேனியில் 21/08/2023 இன்று மாலையில் தேனி – அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட 14 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வள்ளி நகர் சாலை மற்றும் பெத்தனாட்சி கல்யாண மண்டபம் செல்கின்ற சந்திப்பில் கழிவுநீர் சாலையில் தேங்கி பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல விடாமல் சாலையில் கழிவு நீர் துர்நாற்றம் வீசுகின்ற அவலநிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது…. ஏனெனில் இந்த பகுதியில் கழிவு நீர் செல்லும் சாக்கடையே இல்லை என்பது தான்… இது போன்ற நிகழ்வினை நகராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டும் தேனி நகராட்சி நிர்வாகமும் இந்த பகுதி கவுன்சிலரும் கண்டுகொள்வதே இல்லை….ஏன் எதற்கு என்று தெரியவில்லை…. உடனே நகராட்சி நிர்வாகம் இதில் விரைந்து தலையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பார்களா என இப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்………… ……,…தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close