சென்னை:
தமிழகத்தில் இன்று மட்டும் 477 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 332 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுவரை சென்னையில் 6271 பேர் மொத்தமாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ;80000 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இன்று மட்டும் பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை;10535
இன்று மட்டும் மூன்று பேர் கொரானாவினால் பலியாகினர்.
இதுவரை பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை;3538
இன்று 939 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10585 ஆக அதிகரித்துள்ளது.