திருவாரூர் நீடாமங்கலம் இராசசேகரன் இறைவனடிசேர்ந்தார் அப்பகுதி சோகத்தில் ஆழ்ந்தது..
நீடாமங்கலம் பேரூராட்சி மன்றத் தலைவர் R R ராம்ராஜ் அவர்கள் தந்தையும்
முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவரும் நீடாமங்கலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர தலைவர் R .இராசசேகரன் அவர்கள் 02.01.2026 வெள்ளிகிழமை மாலை இறைவனடி சேர்ந்தார்.நகர மக்கள் வேதனையை சுமந்து பிரியா விடை அளித்தனர்.நீண்ட காலமாகநீடாமங்கத்தை தாக்கும் இயற்கை பேரழிவில் காத்த எங்கள் குலதெய்வம் என்று மக்கள் புகழாரம்மற்றும் இவரை போன்ற ஒரு தலைவர் இதுவரை இல்லை என்றும் திமுக ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர் கட்சியாக இருந்தாலும்நீடாமங்கலமத்தின் முடி சூடா மன்னராக திகழ்ந்தார் பெரிய பொறுப்புகள் வேண்டாம் என்று தடுத்துநீடாமங்கலம் பகுதி மக்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டார் என்று மக்கள் புகழாரம் சூட்டினார்.மக்கள் நாயகனாக வலம் வந்தார் மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்ட களம் பல கண்டு தீர்வு கண்டவர்.மக்கள் கண்ணிரை துடைத்தவர்,,கொரனா கால கட்டங்களில் இரவு பகல் பாராது தனது உடல் நிலையும் கருத்தில் கொள்ளாமல் மக்களுக்குகாக பாடுபட்டார் என்று மக்கள் புகழாரம் சூட்டினார்மற்றும் தமிழக தொழில் துறை மந்திரி டி ஆர் பி ராஜா மற்றும் மூத்த அமைச்சர்கள் கே என் நேரு முன்னாள் அமைச்சர் காமராஜ் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் செந்தமிழ் செல்வன் தஞ்சை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பழனி மாணிக்கம் நீடாமங்கலம் சேர்மன் சோம செந்தமிழ் செல்வன் திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் வர்த்தக சங்க தலைவர் pgrr ராஜாராம் தஞ்சை MP முரசொலி நீலன் மெட்ரிக் மேல் நிலை பள்ளி தாளாளரும் காங்கிரஸ் கட்சி மாவட்ட பொறுப்பாளர் கல்வி தந்தை நீலன் அசோகன் அவர்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில நிர்வாகிகள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு இராசசேகரன் அவர்கள் வாழ்ந்து வந்த பாதையை நினைவு கூறி அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தினார்..