fbpx
Others

ஆட்டு மந்தையுடன் அடைக்கப்பட்ட பாஜக மகளிர் அணியினர்.. கொந்தளிக்கும் குஷ்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு நீதி கேட்கும் பேரணியில் பாஜக மகளிர் அணியினர் ஈடுபட முயன்றனர். பாஜக நிர்வாகி குஷ்பு இந்த பேரணியை தொடங்கி வைக்க இருந்தார். அப்போது தடையை மீறி பேரணி செல்ல முயன்றதாக குஷ்பு உட்பட, பாஜக நிர்வாகிகள், பாஜக மாநில மகளிரணி தலைவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் கைது செய்யப்பட்ட பாஜக மகளிர் அணியினர் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள ஆயிரம் வீட்டு யாதவ ஆடு வியாபாரிகள் ஆட்டு மகமை கட்டளை திருமண மண்டபத்தில் ஆடுகள் அடைக்கப்பட்ட பகுதியின் அருகே அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஆடுகள் அடைக்கப்பட்டிருந்த இடத்தில் குஷ்பு உட்பட பாஜக மகளிர் அணியினர் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஏராளமான ஆடுகள் மண்டபத்திற்குள் அடைக்கப்பட்டுள்ளன.200க்கும் மேற்பட்ட ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன நிலையில் தொடர்ந்து ஆடுகள் கத்துவதோடு ஆடுகளின் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதால் பாஜக நிர்வாகிகள் சிரமம் அடைந்துள்ளனர். ஆடுகளின் சத்தத்தால் மகளரிணி நிர்வாகிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஆடுகள் அடைத்துள்ள மண்டபத்தில் பாஜக மகளிர் அணியினரை அடைத்துள்ள நிலையில் வேறு இடம் கேட்டு பாஜக மகளிர் அணியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.பாஜக மகளிர் அணியினர் அடைத்து வைக்கப்பட்டுள்ள மண்டபங்களில் கழிப்பறை உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை எனவும் பாஜக நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பாஜக மகளிர் அணியினர் ஆட்டு மந்தையுடன் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு பாஜகவினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.பாஜக மகளிரணியினர் ஆட்டு மந்தையுடன் அடைக்கப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. பெண்களை மதிப்பது இப்படி தானா? என்றும் பெண்களுக்கு பாதுகாப்பு கேட்டு போராட்டம் நடத்துபவர்களுக்கு இதுதான் கதியா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். எதிர்க்கட்சியாக இருந்தாலும் பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையையும் மனிதர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையையும் கொடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close