திருவள்ளூர் மாவட்டம் –சிறப்பு செய்தி

கர்நாடகாவில் அமைந்துள்ள மைசூரில் நடைபெற்ற 2nd தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்தை வென்றனர்..திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்தில் இருந்து தாராட்சி கிராமத்தை சேர்ந்த கே.தனுஷ் மற்றும் சென்னங்காரணை கிராமத்தை சேர்ந்த எஸ்.சற்குணா என்ற மாணவரும் கர்நாடகவில் அமைந்துள்ள மைசூரில் 2nd தேசியஅளவிலானகராத்தேபோட்டியில்கலந்துகொண்டுவெற்றிபெற்றனர்.இப்போட்டியினை இந்தியன் கவுன்சில் ஸ்போர்ட்ஸ்/எஜுகேஷன் – கர்நாடக அரசு போட்டியினை நடத்தினர். இப்போட்டியில் ஊத்துக்கோட்டை வட்டம் தாராட்சி கிராமத்தை சேர்ந்த தனுஷ் தங்க பதகத்தையும் சென்னங்காரணை கிராமத்தை சேர்ந்த சற்குணம் வெள்ளி பதகத்தையும் வென்றனர்.இப்போட்டியில் மாஸ்டர் எம்.எ.பாஸ்கர் இந்தியன் பிரசிடெண்ட் 4th டான் மாஸ்டர் எம்.மதன் வைஸ் ப்ரெசிடெண்ட் 2nd டான் கலந்து கொண்டனர்.