தமிழக பாரம்பரிய தற்காப்பு கலை – சிறப்பு செய்தி..

தமிழகபாரம்பரியதற்காப்புகலைகளின் சர்வதேச கருத்தரங்கம் ஜூன் மாதம் 29, 30 தேதிகளில் கோவையில் நடக்கிறது.உலக களரி கூட்டமைப்பு சார்பில் இந்திய களரி கூட்டமைப்பு ஏற்பாட்டில் கோவை கே.பி. ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உலக சிலம்ப ஆசான்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் தலைவர். என். ஆர். தனபாலன் . வி.ஜி.பி. குரூப் சேர்மன். வி.ஜி. சந்தோஷம் ஆகியோரை ஆசான்கள் கலைமுது மணி. ஆர். முருகக்கனி, கிருஷ்ணசாமிஎம். முனியசாமிஜே. ஈசன், சுரேந்தர், சுரேஷ் மணி ஆகியோர் நேரில் சந்தித்து அழைத்த போது எடுத்த படம். சிலம்பம், அடிமுறை, குத்துவரிசை, களரி பயிற்று போன்ற தமிழ் பாரம்பரிய வீர கலைகளுக்கான கருத்தரங்கம், பட்டய பயிற்சி வகுப்பு ஆகியவை நடைபெறும். சிலம்பாட்டத்தின் பாரம்பரியத்தை விளக்குகின்ற வகையில் குழு விளையாட்டு நடக்கிறது .உலக அளவில் 12 நாடுகளை சேர்ந்த ஆசான்கள், மாணவர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்கிறார்கள் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்.டாக்டர். எம். முனியசாமி தெரிவித்தார்..