நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம்–பள்ளி மேலாண்மை கூட்டம்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வடக்குத் தோப்பு பள்ளியில் பள்ளி மேலாண்மை கூட்டம் நடைபெற்றது. மாணவர்களுக்கான பல்வேறு செயல் திட்டங்களைப் பற்றி விவாதிக்கப்பட்டது இதில் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி சி.ஜெயா அவர்கள் தலைமையில் நடைபெற்றது SMC சார்ந்த பொறுப்பாளர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் அனைவரையும் கணித பட்டதாரி ஆசிரியர் திருமதி பா.பர்வின் அஃதர் வரவேற்றார்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருமதி இரா.ரேவதி பரிசுகளை வழங்கினார் திருமதி செ.அறிவழகி திருமதி இரா.ரதி ஆகியோர் கலந்து கொண்டனர் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திருமதி சா.இராதா ஆசிரியர் நன்றி உரையாற்றினார். இதேபோன்று செருமங்கலம் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியை கௌசல்யா அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சீனி குடிகாடு தலைமை ஆசிரியர் சவுல்ராஜ் தலைமையிலும் பட்டதாரி ஆசிரியர் ரவிஹாசன் மற்றும் எஸ் எம் சி உறுப்பினர்கள் முன்னிலையில்நடைபெற்ற கூட்டத்திலும் மாணவர்களுக்கு பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது .