தூத்துக்குடியில் நேற்று 62 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். பலத்த காற்று தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கோடை வெயில் முடிந்த பிறகும் தாக்கம் அதிகமாக இருந்ததால், சாலையோர குளிர்பான கடைகள் அதிக அளவில் காணப்பட்டன. கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான காற்றும் வீசியது. நேற்று காலை முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த காற்று வீச தொடங்கியது. காற்று மாலை வரை தொடர்ந்து வீசியது. 62 கிலோ மீட்டர் தூத்துக்குடியில் நேற்று அதிகபட்சமாக 62 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் காற்று சாலைகளில் புழுதியை வாரி இறைத்தது. ரோட்டில் நடந்து சென்றவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகளும் பயணிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். பகலில் மிரட்டிய காற்று மாலை 5 மணிக்கு பிறகு அதன் வேகம் மெல்ல, மெல்ல குறைந்தது. அதேபோன்று வானமும் மேகமூட்டமாக காணப்பட்டது. இந்த காற்று காரணமாக சில இடங்களில் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது.
Read Next
Others
8 hours ago
தேனியில் நடப்பது என்ன ….?
Others
21 hours ago
தேவசெய்தி 8 / 5 / 24
Others
21 hours ago
தேனி மாவட்டம்–ஆன்மீகப் பணியில் ரெட் கிராஸ்..
Others
22 hours ago
காங்., ராகுல் மீது பிரதமர் மோடி தாக்கு…..
8 hours ago
தேனி மாவட்டம்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறதா…?
8 hours ago
தேனியில் நடப்பது என்ன ….?
8 hours ago
ராகுலுக்கு அமித் ஷா சவால்—சிஏஏ சட்டத்தை__ரத்து செய்ய முடியாது..
8 hours ago
பிரதமர் மோடி — வாராணசியில் மே 14-ல் வேட்புமனு தாக்கல்..
21 hours ago
பிரியங்கா–இந்திய மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்..
21 hours ago
விழுப்புரம் M.P தொகுதி வாக்குஎண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பழுது..
21 hours ago
தேவசெய்தி 8 / 5 / 24
21 hours ago
தேனி மாவட்டம்–ஆன்மீகப் பணியில் ரெட் கிராஸ்..
22 hours ago
காங்., ராகுல் மீது பிரதமர் மோடி தாக்கு…..
22 hours ago