பிரதமர் மோடி- மனித குலத்தின் நலனை முன்னிறுத்தி,21-ம் நூற்றாண்டில் முன்னேறிச் செல்ல வேண்டும்.
இந்தியாவில் நடைபெற்ற ஜி-20 அமைப்பு மாநாடுகளை மக்கள் இயக்கமாக மாற்றினோம். சுமார் 60 நகரங்களில் நடைபெற்ற 200-க்கும்மேற்பட்ட மாநாடுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, ஜி-20 அமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியத்தை இணைக்க இந்தியா பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரையை ஜி-20 உறுப்பு நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன. இவ்வாறு அவர் பேசினார்.கடந்த ஆண்டு ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இந்தோனேஷியாவின் பாலியில் நடத்தப்பட்டது. அப்போது‘பாலி பிரகடனம்’ நிறைவேற்றப்பட்டது. இதேபோல, தற்போது டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டையொட்டி டெல்லி பிரகடனத்தை இந்தியா தயாரித்துள்ளது. பூமியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதிசெய்ய வேண்டும். உலகப் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்த வேண்டும். சர்வதேச டிஜிட்டல் கரன்சி குறித்து ஆலோசிக்க வேண்டும். கடல்சார் வணிகத்தை மேம்படுத்த வேண்டும். கடல் வளத்தைப் பாதுகாக்க வேண்டும். சர்வதேச அளவில் ஊழல்களை ஒழிக்க வேண்டும்.உலக நாடுகளில் பசி, பட்டினி, ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்க வேண்டும். உணவு தானியங்கள், எரிசக்தி தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும். சர்வதேச சுகாதாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பசுமைத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். பருவநிலை மாறுபாட்டை தடுக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும்.பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். பாலின சமநிலை, பெண்கள் முன்னேற்றத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி கிடைப்பதை தடுக்க வேண்டும். ஒன்றுபட்ட உலகத்தை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் டெல்லி பிரகடனத்தில் இடம்பெற்றுள்ளன.