என்.ஆர்.தனபாலன்–சிலம்பத்திற்கு தமிழ்நாடு அரசு தனிவாரியம்….

சிலம்பத்திற்கு தமிழ்நாடு அரசு தனிவாரியம் அமைக்கும்வரைஓயமட்டோம்என்.ஆர்.தனபாலன் மலேசியாவில் பேச்சு!! மலேசியா சிலம்பம் போர்க்கலை கவுன்சில் சார்பில் சிரம்பான் பகுதியில் கலைபண்பாட்டு மன்ற அரங்கத்தில் மாபெரும் சிலம்ப அரங்கேற்றவிழா நடந்தது.சிலம்பம் போர்க்கலைநிறுவனத்தலைவர்.என்.முரளிதரன்தலைமைதாங்கினார்.உலகஆசான்கள்,மற்றும்ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்க தலைவர். என். ஆர். தனபாலன் சிலம்ப பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசும்போது: சிலம்ப விளையாட்டு சிறந்த முறையில் வளர்ச்சி அடைய தமிழ்நாட்டில் உடனே சிலம்ப வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும் அதற்கான முயற்சிகளை தீவிர படுத்துவோம்,என்று உறுதிபட கூறினார்.சர்வதேச சிலம்ப பேரமைப்பு தலைவர். பாண்டி.எல். ராஜ்குமார் மெடல் வழங்கி னார்.சர்வதேசசிலம்ப நடுவரும், சிபா. ஆதித்தனார் சிலம்ப கலைக்கூட தலைவருமான கலைமுதுமணி. ஆர். முருககனி ஆசான்,சர்வதேச சிலம்ப போர்க்கலை மன்ற ஆலோசகர். எம்.சந்திரசேகர், முன்னள் மலேசியா சிலம்ப கழக தலைவர். விஸ்வலிங்கம், சாண்டோ ரத்தினம்,இந்தியாவின் சேப்பா அகடமிஆவடி.எஸ். ராஜா, ஆவடிஎன்.சங்கீதா, நெல்லை. மூத்த ஆசான். முகமது முஸ்தபா,சேலம்.ஆர்.சுகுமாரன்ஆசான்,ஆவடி.மாஸ்டர்.கார்த்திகேயன்,மூலக்கடைமாஸ்டர். எல்.வள்ளி மலேசியாவின் மலேக்காவை சேர்ந்த மாஸ்டர்.ப. சுரேஷ்,மாஸ்டர்.கலைச்செல்வன், கிருஷ்ணன்குட்டி, ச. இந்திரஜித், சிவநேஸ்வரன், அபிமன்யு, யோகநாதன், குகப்பிரியாஉள்பட பல ஆசான்கள், பெற்றோர்கள், சுற்று பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

