RETamil Newsஉலகம்
அமெரிக்காவில் இதுவரை 600 மருத்துவப் பணியாளா்கள் பலி!-அதிர்ச்சி தகவல்!
அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான சிகிச்சை போராட்டத்தில் சுமார் 600 மருத்துவப் பணியாளா்கள் வரை பலியாகியுள்ளனா்.
இதுகுறித்து ‘தி கார்டியன்’ என்னும் பிரபல நாளிதழ் தெரிவித்திருப்பதாவது;
அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக, தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வந்த சுமார் 600 மருத்துவப் பணியாளா்கள், அந்த நோய்க்குப் பலியாகியுள்ளனர்.
பலியானவர்களில் மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், மருத்துவமனைப் பணியாளா்கள், மருத்துவமனை அலுவலா்கள், காப்பகப் பணியாளா்கள் ஆகியோர் இதில் அடங்குவார்கள்.
கருப்பினத்தைச் சோந்த அல்து ஆசிய மற்றும் பசிபிக் தீவு பகுதிகளை பூா்விகமாகக் கொண்ட மருத்துவப் பணியாளா்களே பெரும்பாலும் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனா் என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.