Others
ராகுல் காந்தி–அதிகார பேராசையால் பெண்களின் கவுரவத்துடன் பாஜ விளையாடுகிறது.
மணிப்பூரில் கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக அழைத்து சென்றது , பாஜ எம்பி பிரிஜ்பூஷன் சரண் சிங்,மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கு குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்தது தொடர்பான செய்திகள் தொடர்பான வீடியோக்களை இணைத்து ராகுல்காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்காத எந்த நாடும் முன்னேற்றம் அடையாது. அதிகார பேராசையால், பெண்களின் மதிப்பு மற்றும் நாட்டின் சுயமரியாதை ஆகியவற்றுடன் பாஜ விளையாடுகிறது என குறிப்பிட்டுள்ளார். ஏழை, பணக்காரன் இடைவெளி அதிகரித்து விட்டது ஜூலை 20 அன்று காய்கறி விற்பனையாளர் ஒருவர், காய்கறிகளின் விலையேற்றத்தால் தனது துயரங்களைச் சொல்லும் வீடியோவை ராகுல் வெளியிட்டு,’ நாடு இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒருபுறம், ஆளும் ஆட்சியால் பாதுகாக்கப்படும் சக்தி வாய்ந்தவர்கள் உள்ளனர். மறுபுறம் பொதுவான இந்தியர்கள் உள்ளனர். அவர்களுக்கு காய்கறிகள் போன்ற அடிப்படை விஷயங்கள் கூடகிடைக்காமல்போகிறது. .பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே விரிவடைந்து வரும் இந்த இடைவெளியை நாம் குறைக்க வேண்டும். இந்த கண்ணீரை துடைக்க வேண்டும்’ என்று டிவிட் செய்துள்ளார்..