fbpx
Others

மு.க.ஸ்டாலின்–பிரதமர் மோடி தி.மு.க.வை விமர்சிக்க காரணம் என்ன?

தி.மு.க.வை பிரதமர் மோடி விமர்சிக்க காரணம் என்ன?முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்  தன்னை எதிர்க்க யாருமில்லை என்று இருந்தவரின்பிழைப்பை ‘இந்தியா’ கூட்டணி கெடுத்துவிட்டது என்று முதல் – அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.பிரதமர் மோடி, தி.மு.க.வை விமர்சிப்பது ஏன்? தி.மு.க. மேல் அவர் ஆத்திரம் கொள்வது ஏன்? என்பது குறித்துதிருவாரூரில்
பேசினார்.தமிழ்நாட்டுக்கான சிறப்புத்திட்டங்கள் எதையும் வழங்காத மோடிக்கு
தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை. இது மோடிக்கும் தெரியும்.அதனால்தான், தி.மு.க. மேல் அளவுக்கு அதிகமான ஆத்திரத்தை கொட்டுகிறார்.மாநிலம் மாநிலமாக சென்று தி.மு.க.வை விமர்சித்தார். இப்போது தமிழ்நாட்டுக்கு வந்தும்அதே பல்லவியைப் பாடுகிறார்.
தூக்கத்தில் இருந்து எழுந்து தி.மு.க.வை தரக்குறைவாக பேசுகிறார். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை.இதுபோல் எத்தனையோ ஏச்சுகள், ஏளனங்கள், அரட்டல்கள், மிரட்டல்களை பார்த்துப் பழக்கப்பட்டவர்கள்தான்நாங்கள். வசவுகளை வாங்கி வாங்கி உரம் பெற்றவர்கள் நாங்கள்” இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close