Others
இந்தியா — “6 கனடா தூதர்கள் வெளியேற்றம்” பிரச்னை என்ன ?


கடந்த ஆண்டு, கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளார் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு கொலை செய்யப்பட்டார். இவரது கொலையில் இந்தியாவுக்கும், கனடாவில் இருக்கும் இந்திய தூதர்களுக்கும் சம்பந்தம் உள்ளது என ஆரம்பத்தில் இருந்து இந்தியா மீது கனடா குற்றம்சாட்டி வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்த குற்றசாட்டை மறுத்துவரும், இந்தியா தற்போது வரை தனது நிலைபாட்டில் உறுதியாக உள்ளது.இந்த நிலையில், கனடா அரசு அங்கே உள்ள 6 இந்திய தூதர்களை கனடாவில் இருந்து வெளியேற்றி உள்ளது. இதற்கு பதிலடியாக, கனடா தூதர்கள் வரும் அக்டோபர் 19-ம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.