GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறவில்லை..! பதஞ்சலி நிறுவனம் பதில்!
Patanjali explains about corona medicine
டெல்லி:
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறவில்லை என்று பாபா ராம் தேவின் பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனாவை குணமாக்கும் மருந்து என கொரோனில் என்ற பெயரில் கடந்த 22ம் தேதி ராம்தேவ் ஒரு மருந்தை அறிமுகப்படுத்தினார். அந்த மருந்தை விளம்பரம் செய்யக்கூடாது, விற்பனை செய்யக்கூடாது என்று ஆயுஷ் அமைச்சகம் உத்தரவிட்டது.
அது குறித்து பல கேள்விகளையும் எழுப்பி உள்ளது. இந் நிலையில் உத்தராகண்ட் மாநில ஆயுஷ் அமைச்சகம் அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளித்துள்ள பதஞ்சலி நிறுவனத்தின் சிஇஓ ஆச்சார்ய பால்கிருஷ்ணா கூறி உள்ளதாவது:
அந்த மருந்தை எடுத்துக் கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு குணம் கிடைத்தது. வேண்டுமானால் மீண்டும் சோதனைகளை நடத்த தயார். பதஞ்சலி நிறுவனத்தை அழிக்க சிலர் சதி செய்கின்றனர் என்று கூறினார்.