fbpx
Others

பெரியகுளத்தில் இந்திய கம்யூனிஸ்ட்முற்றுகை

தேனி மாவட்டம். 26. பெரியகுளத்தில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த மூன்றாந்தல் அருகில் தனியார் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபானக்கடை திறப்பதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ரமேஷ் தலைமைதாங்கினார்.இளைஞர்பெருமன்ற மாவட்ட செயலாளர் தமிழ்பெருமாள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர் தேசத்தந்தை மகாத்மா காந்தி சிலை அருகில் மதுபான கடை திறப்பது அவருக்கு அவமதிப்பு செய்யும் வகையில் உள்ளதாகவும், கோவில், மசூதி, சர்ச், கல்வி நிலையங்கள் வணிகநிறுவனங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனியார் மதுபான கடை திறந்ததை கண்டித்தும் நிரந்தரமாக மூட வலியுறுத்தியும்இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் பெண்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.தென்கரை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close