fbpx
Others

புதுச்சேரியில்….. துணை தாசில்தார்கள்பதவி உயர்வு, / பணிஇடமாற்றம்.

புதுச்சேரி வருவாய்துறையில் பணியாற்றி வரும் 13 வருவாய் ஆய்வாளர்களுக்கு, துணைதுணை தாசில்தாராக பதவி உயர்வு தாசில்தார்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் முதல்-அமைச்சர் அலுவலகத்தில் நடந் தது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு அவர்களுக்கு பதவி உயர்வுக்கான ஆணையை வழங்கினார். இதில் சபாநாயகர் செல்வம், மாவட்ட கலெக்டர் வல்லவன், துணை கலெக்டர் வினயராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் 2 துணை தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சப்-கலெக்டர் (கலால்) அலுவலகத்தில் பணி புரியும் துணை தாசில்தார் ஜோதிமணி, வில்லியனூர் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கும், புதுச்சேரி தேசிய பேரிடர் மீட்பு மைய அலுவலகத்தில் பணிபுரியும் சுசிலா, நில அளவை மற்றும் பதிவேடுகள் துறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தவை சப்-கலெக்டர் வினயராஜ் பிறப்பித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close