RETamil NewsTrending Nowஇந்தியா
2 ஆயிரத்தை எட்டும் கொரோனா பலி…! மெகா சிக்கலில் மகாராஷ்டிரா!
1982 dead in Maharashtra due to corona
மும்பை:
மகாராஷ்டிராவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
நாடு முழுவதும் படு வேகமாக பரவும் கொரோனா, மகாராஷ்டிராவில் உச்சத்தை எட்டி உள்ளது. அங்கு இன்று ஒரே நாளில் 2,598 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.
ஒட்டு மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,546 ஆகும். அதுவும் ஒரே நாளில் அங்கு 85 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகி விட்டனர்.
அதன் காரணமாக மகாராஷ்டிராவில் கொரோனா பலி எண்ணிக்கை 1,982 ஆக உயரந்துள்ளது. 698 பேர் இன்று கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 18,616 ஆக அதிகரித்து உள்ளது. தொடரும் பாதிப்புகளால் சுகாதார தடுப்பு நடவடிக்கை பணிகளில் அம்மாநில அரசு இறங்கி இருக்கிறது.