நீடாமங்கலம்-உலக இந்து திருக்கோவில் அமைப்பின்-செய்தி
உலக இந்து திருக்கோவில் அமைப்பின் நிறுவன தலைவர் ஆன்மிக செம்மல் அய்யா டாக்டர் NC சீனிவாசன் அவர்கள் திருவாரூர் மாவட்டம் இன்று காலை வருகை தந்தார் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலுக்கு சென்று அங்கு நடைபெறும் புணரமைப்பு பணிகளை பார்வையிட்டு சுவாமி தரிசனம் செய்தார் கோவிலுக்கு வருகை தந்த உலக இந்து திருக்கோவில் அமைப்பின் நிறுவன தலைவர் அய்யா ஆன்மிக செம்மல் டாக்டர் NC சீனிவாசன் அவர்களை பரம்பரை அறங்காவலரும் உலக இந்து திருக்கோவில் அமைப்பின் திருவாரூர் மாவட்ட கௌரவ தலைவர் எஸ் சுரேஷ் வரவேற்றார்.அதன் பிறகு உலக இந்து திருக்கோவில் அமைப்பின் திருவாரூர் மாவட்ட தலைவர் திரு ஜோதிநாதன் இல்லத்தில் காலை உணவு அருந்தினார் பூவணுர் அங்காளபரமேஸ்வரி திருக்கோயிலில் உலக இந்து திருக்கோவில் அமைப்பின் சார்பாக ஒரு ஜோடிக்கு இலவச திருமணத்தை தலைமையேற்று நடத்தி தந்தார் உடன் காஞ்சிபுர மாவட்ட இளைஞர் அணி தலைவர் திரு தனசேகரன் மாநில இளைஞர் அணி தலைவர் திருவாரூர் மாவட்ட தலைவர் திரு ஜோதிநாதன் திருவாரூர் மாவட்ட கௌரவ தலைவர் சுரேஷ் தஞ்சை மாவட்ட தலைவர் செந்தில் குமார் மற்றும் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் அய்யா அவர்களிடம் ஆசி பெற்றனர்.