RETamil News
கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கஜா புயல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு அப்போது அறிவிக்கப்பட்டிருந்த மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. எனவே தற்போது புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலால் நவ.15,16,17 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதால் , தற்போது டிச.13,14,15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.















