fbpx
Others

தேனிமாவட்டாச்சியர் கவனத்திற்க்கு….? மவுனம் ஏன்…..?

  தேனி மாவட்டம் தேனியில் வள்ளி நகர் சாலை மற்றும் பெத்தனாட்சி கல்யாண மண்டபம் செல்கின்ற சந்திப்பில் இன்று மாலை பெய்த மழையால் சாலையோர குடியிருப்புக்குள் வெள்ள நீர் புகுந்து மழை நீர் வடிகால் வழியாக செல்லாமல் தேங்கியுள்ள காட்சி…… இப் பகுதியில் இப்போதுதான் தார்ச்சாலைகள் போடப்பட்டது, இந்த பகுதியில் கழிவுநீர் செல்லும் வாய்க்காலே இல்லை… தரமற்ற சாலைகளும், கழிவுநீர் வாய்க்கால்களும் இல்லாமல் இப் பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்….இவைகளுக்கெல்லாம் விடியல் எப்போது என்று தெரியவில்லை… இதற்கு தேனி நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா என்று இப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர் ???……………………………………….. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close