திருவள்ளூர்–விளாங்காடுபாக்கம் ஊராட்சி—-செய்தி
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் இ.ஆ.ப அவர்கள் பொதுமக்கள் வழங்கிய பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.கே. ஜெயக்குமார், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.சுதர்சனம், சார் ஆட்சியர் (பொன்னேரி) செல்வி.ஐஸ்வர்யா ராமநாதன் இ.ஆ.ப., பொன்னேரி வட்டாட்சியர் திரு.எஸ்.செல்வகுமார், புழல் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமதி.தங்கமணி திருமால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.சித்ரா பெர்னான்டோ, திருமதி.பொற்செல்வி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், விளாங்காடுபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.பாரதி சரவணன், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உள்ளனர்