திருவள்ளூர்–புழல் ஒன்றியம்-தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி — செய்தி.
சீரமைக்கப்பட்ட சமுதாய நலக்கூடத்தை ஊராட்சி மன்ற தலைவர்.கவிதா டேவிட்சன் திறந்து வைத்தார்!
திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் சீரமைக்கப்பட்ட சமுதாய நலக்கூடத்தை ஊராட்சி மன்ற தலைவர் டி.கவிதா டேவிட்சன் தலைமை தாங்கி திறந்து வைத்தார். இதில் புழல் ஒன்றிய பெருந்தலைவர் தி. தங்கமணி திருமால், புழல் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் பா. சாந்தி பாஸ்கரன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இ. அருண்குமார் அனைவரையும் வரவேற்றார். வார்டு உறுப்பினர்கள் வேளாங்கண்ணி சரவணன்,சாந்தி மூர்த்தி,நாகஜோதி வாசுதேவன், தரணிதரன், விமலநாதன், குசேலதாஸ்,கீதா விஜி,வளர்மதி ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு அ வழங்கப்பட்டது.
முடிவில் ஊராட்சி செயலர் தேவகி, மக்கள் நல பணியாளர் சதீஷ்குமார் அனைவருக்கும் நன்றி கூறினர்.