fbpx
RETamil Newsதமிழ்நாடு

ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா…! பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு..! அதிரும் தமிழகம்

527 Corona cases today in tamilnadu

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை தந்திருக்கிறது.

தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 22ம் தேதி ஆயிரம் கொரோனா தொற்றுகள் என்ற அளவில் இருந்த நோயாளிகள் எண்ணிக்கை 2 வாரங்களாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந் நிலையில், இன்று ஒரே நாளில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம்  527 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தொற்றுகள் அனைத்தும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

அதிகபட்சமாக இன்று ஒரு நாள் மட்டும் 12,863 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 527 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3550 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1409 ஆக இருக்கிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close