Others
காவனூரில் ஆற்காடு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கமிட்டி பொதுக்கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த காவனூர் கிராமத்தில் ஆற்காடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசம் காப்போம் ஜனநாயகம் காப்போம் இந்திய அரசியலமைப்பு காப்போம் ஏன்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி பஞ்சாட்சரம் திமிரி மேற்கு வட்டாரத் தலைவர்கே வி. சீனிவாசன் ஆகியோர் தலைமை தாங்கினர் நகரத் தலைவர்கள் எஸ்.பியாரரேஜான், என் அப்துல் சுக்கூர், ஆர் கோபி, எஸ் விநாயகம், வி பெருமாள்,எஸ் எம்.வீரப்பா, லீலா கிருஷ்ணன், எஸ் டி.ராமதாஸ்,எஸ். புஷ்பராஜ்,எஸ் பாபு, ஏ ஆர் பழனி, ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளர்களாக சோளிங்க சட்டமன்ற உறுப்பினர் எம்.முனிதரத்தினம் மற்றும்எம் டி.குலாம் மெய்தீன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர் திமிரி மேற்கு ஒன்றிய செயலாளர் கே பி.பாபு என்கிற ரேணுகோபால், நன்றி கூறினார்.