சென்னை ஐசிஎஃப்-ல் தயாராகும் 50-வது வந்தே பாரத் ரயில்.
இதையடுத்து, அதிக அளவில் வந்தே பாரத் ரயிலை தயாரித்து வழங்க ஐசிஎஃப்-க்கு ரயில்வே வாரியம் அறிவுறுத்தியது. இதையடுத்து, வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், சென்னை ஐசிஎஃப் ஆலையில் 50-வது வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி நடைபெறுகிறது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. எனவே,சென்னை ஐசிஎஃப் 2023-24-ம் நிதியாண்டில் 736 வந்தே பாரத் ரயில்பெட்டிகள் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. வாரத்துக்கு 2 அல்லது3 வந்தே பாரத் ரயில்களை தயாரித்து வழங்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தலா 16 பெட்டிகளைக் கொண்ட 46 வந்தே பாரத் ரயில்கள்அல்லது தலா 8 பெட்டிகள் கொண்ட92 வந்தே பாரத் ரயில்களைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கிடையில், சென்னை ஐசிஎஃப் ஆலையில் 50-வது வந்தே பாரத் ரயில் தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இம்மாத இறுதிக்குள் இந்த ரயிலை தயாரித்து வழங்குவோம். இவ்வாறு ரயில்வே அதிகாரிகள். கூறினர்.