fbpx
Others

வங்க தேசத்தில் வன்முறை — இந்தியர்கள் 400 பேர்பத்திரமாக மீட்பு !

Bangladesh Crisis

வங்க தேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு ஆட்சி செய்து வந்தது. கடந்த 2018ம் ஆண்டு விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து இடஒதுக்கீடு திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. எனினும் மீண்டும் இடஒதுக்கீட்டு திட்டத்தை அண்மையில் வங்கதேச அரசு கையில் எடுத்த நிலையில், இதற்கு மாணவர் அமைப்பினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே போராட்டம்வன்முறையாக வெடித்த நிலையில், 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு விமானப் படை விமானம் மூலம் இந்தியாவுக்கு தப்பினார். தற்போது இந்தியா அடைக்கலம்வழங்கியுள்ளது.லண்டனுக்குதஞ்சம்புகுவதுதொடர்பாகஷேக்ஹசீனாமுயற்சிகள்மேற்கொண்டுவருகிறார்.இதுஒருபுறம்இருக்கவங்கதேசத்தில்போராட்டக்காரர்களின் அட்டகாசம் அதிகரித்துகொண்டேவருகிறது.வங்கதேசத்தின்ஒட்டுமொத்த மக்கள் தொகையான 17 கோடியில் 8 சதவீதம் பேர் இந்துக்கள். இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், குறிப்பாக இந்து கோயில்களை கல்வீசி தாக்கி சேதப்படுத்தி உள்ளதாகவும் கண்டனங்கள் குவிந்துள்ளன. போராட்டம் தொடங்கியது முதல் இதுவரை 300க்கும் மேற்பட்ட இந்துக்களின் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. அதே சமயம் சில இடங்களில் இந்துக்களின் வீடுகள் மற்றும் கோயில்களை இஸ்லாமியசமூகத்தினர்பாதுகாத்துவரும்சம்பவங்களும்நடந்துள்ளன.இதற்கிடையே வங்க தேசத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி டாக்காவில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டு டெல்லிக்கு ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டு வருகின்றனர். முதற்கட்டமாக சிறப்பு விமானம் மூலம் 6 குழந்தைகள் உள்பட 400 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மற்ற இந்தியர்களையும் அழைத்து வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close