நம்ப முடிகிறதா…? 10 ரூபாய்க்கு கொரோனா மருந்தாம்…?
Corona medicine for 10 rupees
டெல்லி:
இந்தியாவில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் டெக்ஸாமெதசோன் தயாரிப்பதால் ரூ.10-க்கு கொரோனா மருந்து விற்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகம் முழுவதும் 200 நாடுகளில் கொரோனா பாதிப்புகள் உச்சத்தில் உள்ளன. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,43,091 லிருந்து 3,54,065 ஆக உள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,900 லிருந்து 11,903ஆக உயர்ந்துள்ளது. இந் நிலையில், கொரோனா பாதித்து வென்டிலேட்டரில் சிகிச்சையில் இருப்பவர்களை காப்பாற்ற டெக்ஸாமெதசோன் மருந்து பலன் தரும் என்று லண்டன் மருத்துவக்குழு தெரிவித்தது.
லேசான கொரோனா உள்ளவர்களுக்கு இந்த மருந்து பயன்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் டெக்ஸாமெதசோன்-ஐ தயாரிக்க ஆரம்பித்துள்ளன. ஆகையால் ரூ.10க்கு மருந்து கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.