RETamil News
இந்தோனேசியாவில் திடீர் சுனாமி – பலி எண்ணிக்கை 222 ஆக உயர்வு
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் , சுனாமி ஏற்படுவது என்பது வாடிக்கையாக உள்ளது. ஆனால் தற்போது இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா ஆகிய பகுதிகளில் பீச்சுகள் மற்றும் கடலோர பகுதிகள் உள்ளன.இந்நிலையில் எரிமலை வெடிப்பு அங்கு ஏற்பட்டதால் சுனாமிஅலைகள் திடீரென உருவானது.
இவ்வாறு ஏற்பட்ட சுனாமிஅலைகள் அந்த கடலோர பகுதியில் தாக்கியதில் முதற்கட்டமாக 168 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது.மேலும் 745 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது உயிரிழந்தவர்களின் எண்னிக்கை 222-ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமியை உண்டான பாதிப்பால் 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பேரிடர் மீட்பு குழு தெரிவித்துள்ளது.