RETamil NewsTrending Nowஇந்தியா
இவங்க நடந்து வந்தா ஊருக்குள்ளே விடாதீங்க..! மத்திய அரசின் ஷாக் அறிவிப்பு
No entry for migrant labours by walk
டெல்லி: சொந்த ஊர்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்வதை அனுமதிக்க வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடந்தே செல்கின்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் வைரலாகின.
நடந்து செல்லும் வழியில் விபத்துகள், உடல்நல கோளாறு காரணமாக பலர் உயிரிழந்து வருகின்றனர். இந் நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்வதை அனுமதிக்க வேண்டாம் என்று அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
அவர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருவதாகவும், இந்த ரயில்களுக்கு மாநில அரசுகள் போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.