fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 7,188 பேர் கொரோனாவில் குணம்..! சுகாதார அமைச்சகம் தகவல்!

Maharashtra corona cure 7188

மும்பை:

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 7,188 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 1.82 லட்சத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.

அந்த வகையில் மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 8,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,27,031 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் மேலும் 246 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,276 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 7,188 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,82,217 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் குணமடைந்தோர் விகிதம் 55.72 சதவீதமாக உள்ளது. அது மட்டுமின்றி, மகாராஷ்டிராவில் 1,32,236 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

Tags

Related Articles

Back to top button
Close
Close