GeneralRETamil NewsTrending Nowஇந்தியா
மகாராஷ்டிராவில் ‘மெகா’ ஆட்டம் காட்டும் கொரோனா…! 55 போலீசாருக்கு உறுதி
Police officials got corona in Maharashtra
மும்பை:
மகாராஷ்ராவில் 24 மணி நேரத்தில் 55 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்றுகள் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ள மாநிலம் மகாராஷ்டிராவாகும். 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்தாலும் மகாராஷ்ராவில் பாதிப்பு குறையவில்லை.
இந் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது: மாநிலம் முழுவதும் 35058 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 1328 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.