ஆதீனங்களிடம் இருந்து செங்கோலை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி
-
புதிய நாடாளுமன்றம் நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இதில், 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று இரவு, தமிழ்நாட்டின் திருவாவடுதுறை மடத்தின் ஆதீனங்களிடமிருந்து இந்தியாவின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேரு பெற்றுக்கொண்ட செங்கோலினை நாளை பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றத்தில் நிறுவவிருக்கிறார். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு செங்கோலினை வழங்குவதற்கான 20-க்கும்மேற்பட்ட ஆதீனங்களின் தலைவர்கள் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.தொடர்ந்து பிரதமர் மோடிக்கு ஆதீனங்கள் நேரில் ஆசி வழங்கி, செங்கோல்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். அதன்படி ஆதீனங்களிடம் இருந்து செங்கோலினை பிரதமர் நரேந்திர மோடி இன்று பெற்றுக் கொண்டார்.முன்னதாக பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.