வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம்-நாடகம்அல்ல–மோடிக்கு பிரியங்கா பதிலடி….
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம், காற்று மாசுபாடு ஆகியவை மிகப் பெரிய பிரச்சினைகள். அவற்றைப் பற்றி விவாதிப்போம். பாராளுமன்றம் எதற்காக? அவற்றைப் பற்றி விவாதிக்கத்தான் இருக்கிறது. பொதுமக்களின் முக்கிய பிரச்சினைகளைப் பற்றி பேசுவது, கேள்வி எழுப்புவது, விவாதிக்க கேட்பது—இவை நாடகம்அல்ல” என்று
பிரியங்கா கூறினார் இதேபோல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனாகார்கேவும்பிரதமர்மோடியைவிமர்சித்துள்ளார்.இதுதொடர்பாகஅவர்தனதுஎக்ஸ்தளப்பதிவில்குறிப்பிட்டதாவது“குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளில், பாராளுமன்றத்துக்கு வெளியே முக்கியநாடக உரையை நிகழ்த்தியுள்ளார். கடந்த 11 ஆண்டுகளாக பாராளுமன்ற ஒழுக்கத்தையும்அமைப்பையும்தொடர்ந்துமத்தியஅரசுநசுக்கிவருகிறதுஎன்பதேஉண்மை.கடந்தமழைக்காலக் கூட்டத்தொடரில் மட்டுமே குறைந்தது 12 மசோதாக்கள் அவசரமாக நிறைவேற்றப்பட்டன.சில மசோதாக்கள் வெறும்15நிமிடங்களிலும், சிலமசோதாக்கள்எந்தவிவாதமும்இல்லாமலும் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகளுக்கு எதிரான கருப்பு சட்டங்கள்,ஜிஎஸ்டி,பிஎன்எஸ்எஸ்போன்றமசோதாக்களைபாராளுமன்றத்தில் ‘புல்டோசர்’ மூலம் நீங்கள் எப்படி கொண்டு வந்தீர்கள் என்பதை முழு நாடும் கண்டிருக்கிறது. மணிப்பூர் பிரச்சினை எழுப்பப்பட்டு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் வரை நீங்கள் அமைதியாக இருந்தீர்கள். பணிச்சுமை காரணமாக எஸ்ஐஆர் பணிகளில்ஈடுபடும் பிஎல்ஓக்கள்தொடர்ந்துபலியாகிவருகின்றனர்.‘வாக்குதிருட்டு’உள்ளிட்டபிரச்சினைகளுக்குமுன்னுரிமைஅளிக்கஎதிர்க்கட்சிகள் விரும்புகின்றன.நாங்கள்அவற்றைபாராளுமன்றத்தில் தொடர்ந்து எழுப்புவோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.பாராளுமன்ற குளிர்காலக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் ஆலோசனைக்கூட்டம் இன்று காலை நடைபெற்றது. காங்கிரஸ் தலைவரும் மேல்சபைஎதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூனா கார்கே அவர்களின் தலைமையில்,எதிர்க்கட்சிஎம்.பி.க்கள்ஆலோசனையில் ஈடுபட்டனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, திமுகவின் டி.ஆர். பாலு, திருச்சி சிவா,மக்கள்நீதிமய்யம்தலைவர்கமல்ஹாசன்உள்ளிட்டோர்கலந்துகொண்டனர்.எதிர்க்கட்சிகள் தொடர்பாக பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்தார்.