RETamil NewsTrending Nowஉலகம்
கொரோனாவுக்கு மருந்து ரெடி…! சீனா அறிவிப்பு
China declares Corona vaccine
பெய்ஜிங்: உலகை உலுக்கி வரும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை வெற்றிகரமாக கண்டு பிடித்துவிட்டதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த தகவலை அந்த நாட்டின் சினாவாக் பயோடெக் என்ற நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதாவது கொரோனா வைரஸை எதிர்க்கும் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளதாக அந் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
இந்த தடுப்பு மருந்து குரங்குகளுக்கு செலுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படுவது தெரியவந்துள்ளது. மருந்தை குரங்குகளுக்கு செலுத்திய 3 வாரங்கள் கழித்து கொரோனா வைரஸ் செலுத்தப்பட்டது.
1 வாரம் கழித்து குரங்குகள் பரிசோதிக்கப்பட்டன. அப்போது குரங்குகளின் நுரையீரலில் வைரஸ் இல்லை என்பது கண்டறியப்பட்டது. ஆனால் மருந்து செலுத்தப்படாத குரங்குகளுக்கு மூச்சுத்திணறல் இருப்பதும் தெரியவந்தது.