GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு
தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை..! அமைச்சர் கடம்பூர் ராஜூ!
Minister kadambur raju about cinema theatre opening
சென்னை:
தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டமாக தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், திரையரங்குகள், வழிபாட்டு தலங்கள், திருமண மண்டபம் உள்ளிட்டவைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. திரையரங்குகளை திறக்க வேண்டும் என திரைத்துறை தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந் நிலையில், அதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:
வெளிநாடுகளை போன்று ஒரு வரிசையில் இரண்டு பேர் மட்டுமே படம் பார்க்கும் முறையால், திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபம் கிடைக்காது. எனவே இந்த விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி உரிய நடவடிக்கை எடுப்பார் என்று கூறினார்.