GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு
கன்னியாகுமரியில் 161 பேருக்கு கொரோனா…! மொத்த பாதிப்பு 1467 ஆக உயர்வு!
Kanykumari corona cases increases
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,467 ஆக உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 89,532 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,966-ஆக அதிகரித்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 77,338 ஆக அதிகரித்துள்ளது.
இந் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே 1,306 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது இப்போது மேலும் 161 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,467 ஆக உயர்ந்துள்ளது. இது வரை 457 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.