fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

3 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு…! விழி பிதுங்கும் மகாராஷ்டிரா!

Maharashtra corona cases crosses 3 lakhs

மும்பை:

மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3.10 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் புதியதாக 9,518 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.


இதையடுத்து, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,10,455 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் மேலும் 258 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,854 ஆக உயர்ந்துள்ளது.
3,906 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,69,569 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, மகாராஷ்டிராவில் 1,28,730 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

Tags

Related Articles

Back to top button
Close
Close