fbpx
Others

விஜய்யிடம்கடுமையானகேள்விகள்., முக்கியமானவை என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன..

டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரான விஜய்யிடம் 7 மணி நேரம் விசாரணைதமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த ஆண்டு செப். 27ம் தேதி கரூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்சிக்கி41பேர்உயிரிழந்தனர்,பலர்படுகாயமடைந்தனர். இதுகுறித்துவழக்குப்பதிவுசெய்துசிபிஐவிசாரணைமேற்கொண்டுவருகிறது.விசாரணையின் முக்கிய நடவடிக்கையாக, தவெக தலைவர் விஜய்யிடம் பல்வேறு கேள்விகளை எழுப்ப முடிவு செய்த சிபிஐ, அவரை இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தது. அதன் அடிப்படையில், சென்னையில் இருந்து தனி விமானத்தில் விஜய் இன்று காலை டெல்லி சென்றார்.பின்னர்,சிபிஐதலைமையகத்துக்குச்சென்றுவிசாரணையில்நேரில்ஆஜரானார்.  இந்த விசாரணையின்போது மூன்று முக்கிய கேள்விகளை சிபிஐ, விஜய்யிடம் எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கேள்விகள் கடுமையானவை மற்றும் முக்கியமானவை என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.முதல் கேள்வியான, ‘நீங்கள் ஒரு திறந்த வாகனத்தில் நின்று கொண்டிருந்தீர்கள்,கூட்டத்தில்மக்கள்மயங்கிவிழுவதுதெளிவாகத்தெரிந்தும்,நீங்கள்உங்கள்பேச்சைத்தொடர்ந்ததுஏன்?’எனக்கேட்கப்பட்டது.இரண்டாவது கேள்வியில், ‘சிலர் மயங்கி விழுந்தபோது,நீங்கள்கூட்டத்திற்குத்தண்ணீர்பாட்டில்களைவிநியோகித்துக்கொண்டிருந்தீர்கள், அப்படியிருந்தும் இந்த விஷயத்தில் ஏன் எந்த உடனடி நடவடிக்கையும் எடுக்கவில்லை?’ எனக் கேட்டனர்.மூன்றாவது மற்றும் மிக முக்கியமான கேள்வியாக, ‘நீங்கள் ஏன் சரியான நேரத்தில் கூட்ட இடத்திற்கு வரவில்லை?  உங்கள்தாமதம்கூட்டத்தில்அமைதியின்மையையும் அழுத்தத்தையும்ஏற்படுத்தியது.இதுஉங்கள்அரசியல்அதிகாரத்தைக்காட்டும்செயலா?’எனகேகேட்கப்பட்டது.கரூர்பேரணியின்ஏற்பாடுகள்,திட்டமிடல்,காவல்துறையுடனானஒப்பந்தங்கள்,கூட்டக்கட்டுப்பாடுமற்றும்பாதுகாப்புஏற்பாடுகள்குறித்தும்அவரிடம்கேள்விகள்எழுப்பப்பட்டுள்ளன.பேரணியை ஏற்பாடு செய்தல் மற்றும் நிர்வகிப்பதில் ஏற்பட்டதாகக் கூறப்படும் அலட்சியம்குறித்தும்விஜய்யிடம்சிபிஐவிசாரணைநடத்துகிறது.முக்கியமாக,தவெகபேரணிக்குமுன்புகட்சித்தலைவர்களுடன் நடத்தப்பட்ட கூட்டங்களின் எண்ணிக்கை மற்றும் அந்தக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் பற்றி சிபிஐ அறிய விரும்புகிறது.கரூர் நிகழ்வின் போது என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டன? என்ன குறைபாடுகள் ஏற்பட்டன?என்பதைகண்டறியசிபிஐமுயற்சிக்கிறது  பேரணியின் போது காவல்துறைக்கும் கட்சிக்கும் இடையே பேசப்பட்ட ஏற்பாடுகளும் சிபிஐயின் முக்கிய அம்சமாக உள்ளது. கூட்டக் கட்டுப்பாடு ஏன் முறையாகப்SC says can't pass blanket order on appointment of CBI director | CBI | Supreme Court பின்பற்றப்படவில்லை? என்பது குறித்தும் சிபிஐ விசாரணை நடத்திவருகிறது.இவ்வளவு பெரிய கூட்டத்திற்குத் தண்ணீர், பாதுகாப்பு மற்றும் அவசரகால மேலாண்மைக்கான ஏற்பாடுகள் போதுமான அளவில் ஏன் செய்யப்படவில்லை என்பது குறித்தும் சிபிஐ விசாரணைநடத்துகிறது.மேலும்,பேரணியின் செலவுகள், உள்கட்டமைப்பு, போக்குவரத்து, தன்னார்வலர்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களின் உண்மைத்தன்மையை ஆராய சிபிஐ திட்டமிட்டுள்ளது.டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் விஜய்யிடம் இரவு 7 மணி வரை விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close