fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

ரூ.12 கோடியை நெருங்கும் கொரோனா அபராதம்…! காவல்துறை தகவல்!

Corona overrule penalty nearing rs 12 crore

சென்னை:

ஊரடங்கை மீறியதாக ரூ.11,39,65,139 கோடி அபராதமும், கடந்த 24 மணி நேரத்தில் ரூ.26,39,985 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 6,11,064 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

24 மணி நேரத்தில் மட்டும் 6295 பேர் கைது   செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஊரடங்கை மீறியதாக 4,59,771 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2130 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை, 5,66,897 வழக்குகளும், 24   மணி நேரத்தில் 4664 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.11,39,65,139 கோடி அபராதமும், கடந்த 24 மணி நேரத்தில் ரூ.26,39,985 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

வாகன உரிமையாளர்கள் தினசரி காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒரு முறை 10 நபர்களுக்கு என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு      வருகிறது.

எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட வரிசை படி உரிமையாளர்களுக்கு வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. வாகனம் பெற வரும்போது எப்ஐஆர் நகல், ஓட்டுனர் உரிமம் அசல் மற்றும் நகல்,  ஆர்.சி.புத்தகம் அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close