அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த 4 எதிரிகள் கைது
அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த 4 எதிரிகள் கைது மற்றும் சுமார் 3.6 லட்சம் புகையிலை பொருட்கள் 21 லட்சம் மதிப்புள்ள 3 கார்கள் பறிமுதல்
இன்று 16.03.2024 தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி,இ.கா.ப., உத்தரவின் பேரில் இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு மேற்பார்வையில் ஆற்காடு கிராமிய வட்ட காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா, தலைமையிலான காவல் அதிகாரிகள் வாலாஜா சுங்கசாவடி அருகே சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி வந்த வாகனங்களை சோதனை செய்த போது 3 கார்களில் அரசால் தடை செய்யப்பட்டசுமார் 2.7 டன் குட்கா போன்ற புகையிலை பொருட்களை கடத்தி வந்த நான்கு எதிரிகள் ராஜஸ்தானை மாநிலத்தை சேர்ந்த A1.கணபத் (வ/28) த/பெ ஆப்பர்ராம், A2. பரத்குமார் (வ/26) த/பெ தர்காராம், A3.கல்யாண்ராம் (வ/26) த/பெ பங்கர்லால், A4. சுரேஷ் (வ/26) த/பெ ரத்தன்ராம் கைது செய்தும் அவர்களிடமிருந்த குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 கார்கள் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.