fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

24 மணிநேரத்தில் 9 பேர் மரணம்…! உச்சக்கட்டத்தில் சென்னையில் கொரோனா…?

9 deads in chennai last 24 hours

சென்னை:

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் 11 பேர் கொரோனாவால் உயிரிழக்க அவர்களில் சென்னையில் மட்டும் 9 பேர் உயிரிழந்திருந்தனர். நள்ளிரவு முதல் இன்று காலை வரை 9 பேர் சென்னையில் கொரோனாவால் மரணம் அடைந்துள்னர்.

ஸ்டான்லி மருத்துவமனையில் மே 31ம் தேதி சேர்க்கப்பட்ட 75 வயது நபர் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். மண்ணடியைச் சேர்ந்த 53 வயது நபரும் நேற்று இரவு பலியானார்.

மே  26ம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த திருவொற்றியூரைச் சேர்ந்த 65 வயது நபர்,  27ம் தேதி அனுமதிக்கப்பட்ட 57 வயது பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

எண்ணூரைச் சேர்ந்த 69 வயது நபர், ராயபேட்டையைச் சேர்ந்த 55 வயது நபர் ஸ்டான்லி மருத்துவமனையில் பலியாகி உள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் மட்டும் 6 பேர் உயிரிழந்திருக்க, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேர் இறந்துள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close