ஒரு குடி, அப்படியே கடி…! பாம்பை துண்டு, துண்டாக்கிய ‘குடிகார குமார்’
பெங்களூரு: கர்நாடகாவில் மதுபிரியர் ஒருவர் போதையில் பாம்பை துண்டு, துண்டாக கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கிட்டத்தட்ட 40 நாட்களுக்கும் மேலாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. அதனால் மது கிடைக்காமல் மது பிரியர்கள் கடும் உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த நிலையில் நேற்று முன் தினம் முதல் பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் கர்நாடகா மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறி இருக்கிறது. குமார் என்ற இளைஞர் மதுக்கடைகள் திறந்த மகிழ்ச்சியில் வயிறு முட்ட, முட்ட குடித்து விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியிருக்கிறார்.
அப்போது சாலையில் பாம்பு ஒன்று குறுக்கிடவே ஆத்திரத்தில் குமார் அதை பிடித்து கழுத்தில் போட்டுக் கொண்டு வீடு திரும்பியுள்ளார். கழுத்தில் பாம்புடன் அவர் வீட்டுக்கு வந்ததை கண்ட குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதோடு பாம்பை பிடித்து அவர் துண்டு துண்டாக கடித்து துப்பியிருக்கிறார். போதையில் அவர் நடந்து கொண்ட விதத்தை கண்ட குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். மதுபோதையில் இளைஞர் ஒருவர் பாம்பை கடித்து துப்பிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.